Matdata சந்திப்பு-வானொலி தொடர்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் “Matdata சந்திப்பு” என்ற வானொலி தொடரை தொடங்கி வைத்தார்.
முக்கிய தகவல்கள்:
Matdata சந்திப்பு என்பது இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் அகில இந்திய வானொலி (AIR) இணைந்து தொடங்கப்பட்ட ஒரு வருட கால வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்.
இந்த வானொலித் தொடரில் மொத்தம் 52 அத்தியாயங்கள் உள்ளன.
இது அகில இந்திய வானொலி நிலையமும் (All India Radio) இந்திய தேர்தலாணையமும் (Election Commission of India) இணைந்து தயாரிக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
இந்த திட்டம் தகவல் மற்றும் பொழுதுபோக்கு கலந்து தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
நகர்ப்புற மக்கள் வாக்களிப்பதில் அக்கறையின்மையை நிவர்த்தி செய்வதும், ஜனநாயகத்தின் பாதுகாப்பில் தேர்தல் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
தேர்தல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய, வெளிப்படையான, சுதந்திரமான, நியாயமான மற்றும் தூண்டுதலற்ற முறையில் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது பற்றிய நுண்ணறிவை இந்தத் திட்டம் வழங்கும்.
இது 15 நிமிடங்கள் நீடிக்கும் மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7 முதல் 9 மணி வரை அகில இந்திய வானொலி நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
இது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகள் உட்பட 23 மொழிகளில் ஒளிபரப்பப்படும்.
இந்தத் திட்டம், வாக்காளர்களின் பார்வையில் தேர்தலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அது தொடர்பான செயல்முறைகளில் கவனம் செலுத்தும்.
எபிசோடுகள், வாக்காளர் பதிவு, மிண்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தகவலறிந்த மற்றும் நெறிமுறை வாக்களிப்பு, வாக்கு மதிப்பு, உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தேர்தல்கள், தேர்தல் அதிகாரிகளின் கதைகள், மாதிரி நடத்தை விதிகள், தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் போன்ற தீம்
இந்தத் திட்டத்தில் ஊடாடும் செய்தியிடல் அம்சம் உள்ளது. வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க, தேர்தல்களின் போது தகவலறிந்து நல்ல முடிவுகளை எடுக்க உதவும் படி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது நாடகம், கதைசொல்லல், நிபுணர்களின் நேர்காணல், வினாடி வினா மற்றும் இந்திய தேர்தலாணையத்தின் பிரிவான SVEEP (Systemic Voters’ Education and Electoral Participation) உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
இது நேயர்களின் பங்கேற்ப்பிற்கும் வாய்ப்பிருக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. இது நேயர்கன் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், தேர்தல் செயல்முறையை, மேலும் சிறப்புற மேம்படுத்துவதற்க்கு பரிந்துரைகளை வழங்குவதற்கும் உதவுகிறது.
முதல் அத்தியாயத்தின் மையக்கருத்து “வாக்காளர் பதிவு”. இவ்வாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஒளிபரப்பப்படும்
இந்த நிகழ்ச்சி ட்விட்டர், செய்திகள் ஏஐஆர் ஆப்ஸ் மற்றும் யூடியூப்பில் ஒளிபரப்பப்படும்.